இளம் சமுதாயத்தை போதைப்பொருளில் இருந்து மீட்கும் வேலைத்திட்டம் இறுதிவரை : பிரதமர்

7
7

போதைப்பொருள் ஆபத்தில் இருந்து இளம் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை எவ்வாறான தடைகள் வந்தாலும் இறுதி வரை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்கென திஸ்ஸமகாராம சேனாபுர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் பொதுஜன பெரமுன ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.