வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்து,நேற்று (ஞாயிற்றுகிழமை) இடம்பெற்றுள்ளது. காலி வீதி, வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட டபில்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.