மருதனார்மடம் பகுதியில் உள்ள வலிகாமம் வலயக்கல்வி பணிமனைக்கு அண்மையில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிகுண்டு நேற்று மாலை(ஞாயிற்று கிழமை) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்படும்.
அதன் பின்னர் வெடிகுண்டு அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்படும் என்றும் சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
இதே வேளை அப்பகுதியில் அச்சநிலை தோன்றியுள்ளதாக தெரியவருகிறது.