மீன்பிடிப்போரின் உந்துருளிகளுக்கு தீ வைப்பு

21
21

ஹொரோவபத்தான நகரில் உள்ள கங்கைக்கு மீன்பிடிக்க சென்ற 3 பேரின் உந்துருளிகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

நேற்று இரவு மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் அவர்கள் பயணித்த உந்துருளி மீது தீ வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த உந்துருளிகளை ஒர் இடத்திற்கு கொண்டு சென்று தீ வைத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.