கொரோனா தொற்றுறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலையில், மேலும் 105 கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பரிசோதனைகளின் அறிக்கைகள் இன்று பிற்பகல் வேளையில் கிடைக்கப்பெறவுள்ளது. இதேநேரம், 186 கைதிகள் தனிமைப்படுத்தலுக்காக, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து பூனானி தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரை தனிமைப்படுத்தலுக்கு வேறு தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முன்னதாக நேற்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலையில் 210 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.