இரு மீன்பிடி படகுகள் கடலலையில் சிக்கி விபத்து

unnamed 9 1
unnamed 9 1

வெலிகம-கப்பரதொட மற்றும் வெலிகம-பெலேன கடல்களில் உள்ள இரண்டு மீன்பிடிப் படகுகள் கடலலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளன.

நேற்று(ஞாயிற்றுகிழமை) பிற்பகல் வெலிகம-கப்பரதொட மற்றும் வெலிகம-பெலேன பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இந்த இரண்டு சிறிய படகுகளும் கடலுக்குச் சென்றிருந்தன. இந்நிலையில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறைவு செய்துவிட்டு இன்று காலை குறித்த படகுகள் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வாறு கடலலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை, விபத்துக்குள்ளான படகுகளை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.