இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று 8 மாதங்களில் தந்திருக்கின்ற ஒரே ஒரு பரிசு கொரோனா ; ரவிகருணநாயக்கா

ravi
ravi

இந்த அரசாங்கம் ஆட்சி ஏற்று 8 மாதங்களில் தந்திருக்கின்ற ஒரே ஒரு பரிசு கொரோனா இதற்கு ஒரு தீர்வு இல்லை எனவே அவர்களின் அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து ஜக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்ப வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவிகருணநாயக்கா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கட்சி சார்ப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்களை சந்திக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (15); வாடிவீடு விடுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார் 
ஒரு தீர்மானம் மிக்க தேர்தலாக இதனை பார்க்கின்றோம் சாதாரணமாக தேர்தல் காலத்தில் கருத்து கணிப்பு  செய்வோம் அந்த கருத்துக் கணிப்பின்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு மீண்டும் எழுச்சி ஆதரவு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஐக்கியமும் தேசியமும் இருப்பதன் காரணத்தினால் இந்த எழுச்சி  ஏற்பட்டுள்ளது.

வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் டி.எஸ்.சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாஸ, டி.வி.விஜயதுங்க ரணில் விக்கிரமசிங்க காலம் வரை கட்சி பயணிக்கின்றது தமிழ் சிங்கள முஸ்லீம் ஆகிய மூன்று இனமும் ஒற்றுமையாக வழிநடத்தக் கூடிய கட்சி தான் வெற்றிக்குரிய காரணம் எங்களுடைய எண்ணங்களும் செயற்பாடுகளும் கொழும்பில். அம்பாந்தோட்டையில் மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தில் திருகோணமலையில் வெவ்வேறு முகமாக இல்லை இலங்கையில் ஒரே முகமாகத்தான் .

எமது செயற்பாடு இந்த தருணத்தில் எங்களுடைய நாடு எங்களுடைய பௌத்தர்கள், இந்துக்கள் ,முஸ்லீம்கள் என ஒன்றுபட்டு செயற்படவேண்டியுள்ளது அந்த வெற்றிக்கு ஒரே ஒரு வழி ஐக்கிய தேசிய கட்சி தான் அந்த அடிப்படையில் கட்சி இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் மட்டக்களப்பில் கைகொடுத்திருக்கின்றனர் இவர்களை கட்சி ஒருபோதும் மறக்காது. அடுத்த கிழமை ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு வரவுள்ளார் எனவே கட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கவும். 
புதிய ஜனாதிபதி அரசை பொறுப்பேற்று 8 மாதகாலமாக நாங்கள் எதிர்க்கட்சியிலுள்ளோம் இந்த 8 மாதத்தில் சீவனோபாய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது இவர்களுக்குத் தெரியாது எவ்வாறு வழிநடத்துவது என.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பால்மாவின் விலை 320 ரூபா தற்போது 420 ரூபா, சீனி 80 ரூபாவாக இருந்து தற்போது 155 ரூபா,  ரின் மீன் 140 ரூபாவாக இருந்தது தற்போது 240 ரூபா 
எரிபொருளுக்கான விலை உலகசந்தையில் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது அன்று 2 ஆயிரத்து 300 ரூபாவாக இருந்த காஸ் எங்களுடைய ஆட்சியில்  ஆயிரத்து 350 ஆக குறைக்கப்பட்டது இப்போது 1650 ரூபா ஆனால் இப்போது எங்கள் ஆட்சியிருந்தால் 950 ரூபாவுக்கு வழங்கிருப்போம்.

 அதுமாத்திரமல்ல இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது மிகவும் பின் தங்கிய பொருளாதாரம் இந்த அரசாங்கம் தந்திருக்கின்றதுடன் ஒரே ஒரு பரிசாக கொரோனா இதற்கு ஒரு தீர்வு இல்லை வருகின்ற 6ம் திகதி இந்த நாட்டிலே எங்களுடைய ஆட்சியை ஏற்படுத்தி சிறந்த அரசாங்கத்தை முன்னெடுப்பதே எங்களுடைய நோக்கம் .

எங்களுடைய பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டு எங்களுடைய கட்சியின் வளங்களை பெற்றுக் கொண்டு முன்னேற்றமடைந்தவர்கள் இன்று எங்களுக்கு எதிராக வெளியே சென்று போர்கொடி செய்கின்றனர் அவர்கள் அவர்களுடைய சுய திட்டத்தை உயர்த்துவதற்காகவே தவிர மக்களுடைய திட்டத்திற்காக அல்ல யானையில் கொசு ஒன்று வந்து இருப்பதால் அவர்கள் இருந்துள்ளனர் எங்களுக்கு பிரச்சனையில்லை எதிர்காலத்தில் நாங்கள் முன்னேறுவோம்.

இது ஒரு இலகுவான தேர்தல் அல்ல இது ஒரு பிரிவினவாதத்திற்கான தேர்தலுமல்ல இது உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் உங்களுடைய குசினியில் உள்ள நெருப்பை அனைக்க கூடிய தேர்தல் 
எங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்கள் ரவிகருணாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் யானை கட்சி நல்லதில்லை என்கிறார்கள் ஆனால் யானையின் வாலில் தூங்குவதற்கு விருப்பமாக இருக்கின்றனர். இது தான் உண்மையான மாற்றம் 
எங்களுடைய போட்டி மொட்டு கட்சியுடன் மாத்திரம் கடந்த 8 மாதங்களாக அவர்கள் எடுத்திருக்கின்ற அநீதிகளுக்கு எதிராக மக்கள் ஒன்றினைந்து வாக்களித்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றார்.