அம்பாறையில் பொலிஸ் இராணுவம் விசேட அதிரடிப்படையினரின் தபால் மூல வாக்களிப்பு

IMG 20200716 092024
IMG 20200716 092024

நாடு பூராகவும் தபால் மூல வாக்களிப்பு இடம் பெற்று வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு விசேட அதிரடிப்படை இராணுவம்  பொலிஸ் நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு காலை முதல் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

IMG 20200716 092611
IMG 20200716 092611

வியாழக்கிழமை(16) அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் நிலையம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம், சவளக்கடை பொலிஸ் நிலையம்  ,மத்திய முகாம் பொலிஸ் நிலையம், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை மற்றும்  கல்முனை இராணுவ முகாம் உள்ளிட்ட  இடங்களில்  பணியாற்றும்   உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

IMG 20200716 092509
IMG 20200716 092509

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு   நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருவதுடன் 7920 க்கும் அதிகமான  வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

IMG 20200716 100242
IMG 20200716 100242

 மேலும் பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16,17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரை வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவை புரியும் நிலையம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.