நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்மூலம், கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 901 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 906 கடற்படையினரில் 5 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் மொத்தமாக 2,697 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 2,012 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.