தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவரும் யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.