இராணுவம் அரசியல் செய்கிறதா? மக்களிடம் கேட்க சொல்கிறார் யாழ். தளபதி

625.500.560.350.160.300.053.800.900.160.90 20
625.500.560.350.160.300.053.800.900.160.90 20

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடுகின்றனரா என்று பொது மக்களிடம் கேட்டுப் பார்த்தால் விளங்கும். அரசியல்வாதிகள்தான் போலிப் பிரசாரம் செய்கின்றனர் என்று கூறியிருக்கிறார் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய.

அன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், அண்மையில், இராணுவத் தளபதி புங்குடுதீவுக்கு வருகை தந்து, இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை உரியவர்களுக்குக் கையளித்தார்.

இது தொடர்பில் சில அரசியல்வாதிகள் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இராணுவத்தினராகிய எமக்கு பொதுமக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குகிறோம். வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி வருகின்றோம். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளோம்- என்றும் கூறினார்.