இன்று முதல் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பஃவ்ரல் (PAFFREL) அமைப்பு அறிவித்துள்ளது.
பிழையான தகவல்களை வெளியிடுதல், வெறுப்பூட்டும் பதிவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை தரவுள்ளதாகவும் பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.