இளவாலை புனித யாகப்பர் ஆலய புதிய திருப்பீடம் வெள்ளியன்று திறப்பு!

dddde
dddde

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருப்பீடத்தின் திறப்பு விழா நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24.07.2020) காலை 6.30 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இளவாலை மறைக்கோட்ட முதல்வரும் பங்குத் தந்தையுமான அருட்பணி ம. யேசுரட்ணம் அடிகள் தலைமையில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பங்கேற்று புதிதாக அமைக்கப்பட்ட திருப்பீடப் பகுதியை ஆசீர்வதித்து திறந்து வைக்கவுள்ளார்.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் இந்த திறப்பு விழா நிகழ்வில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

திருப்பீடத்தின் கட்டுமானப் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.