கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நபர் ஒருவருடன் நெருங்கிய பழகிய நிலையில் நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவருக்கு நேற்றைய தினம்(புதன்கிழமை) தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு மாத்திரமே நேற்றைய தினம் நாட்டிற்குள் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 14 பேருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேருக்கும் நுரைச்சோலையில் ஒருவருக்கும் என 22 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரைக்கும் 2752 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.