யானையின் தாக்குதலுக்கு உள்ளான பல்கலைக்கழக விரிவுரையாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றம்

QPHWT ak 1
QPHWT ak 1

கிளிநொச்சியில் அண்மையில் யானையின் தாக்குதலில் காயமடைந்த விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்சி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விமானம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று (புதன்கிழமை) மாலை மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம், பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான கொழும்பு, களனிய பகுதியைச் சேர்ந்த காயத்திரி டில்ருக்சி (வயது-32) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள விகாரைக்கு வழிபாட்டுக்கு சென்று விடுதிக்குத் திரும்பிய வேளை காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

அதில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே வேளை கடந்த திங்கட்கிழமை குறித்த விரிவுரையாளர் உயிரிழந்து விட்டார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது