ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட கலால் வரி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு கலால் வரித்திணைக்களத்தின் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்று அதிகாலை ஐஸ் போதை பொருள் 200 கிராமுடன் புத்தளம் நகரில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.