இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தைக் கடந்தது

202007212143035405 8369 persons confirmed with corona today in Maharashtra SECVPF
202007212143035405 8369 persons confirmed with corona today in Maharashtra SECVPF

இலங்கையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இரண்டாயிரத்து 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 77 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 665 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன் சந்தேகத்தின்பேரில் 101 பேர், வைத்தியக்கண்காணிப்பிலும் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது