பாராளுமன்றத்தில் குற்றங்களில் ஈடுபடாத ஒரே குழு நாங்கள் மட்டுமே

z p05 Public
z p05 Public

தற்போதைய பாராளுமன்றத்தில் குற்றங்களில் ஈடுபடாத ஒரே குழு தங்களது குழு மட்டுமே என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை விரும்பாததற்குக் காரணம், அதில் உள்ள பெரும்பான்மையானவர்கள் பல்வேறு குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மீது எந்த கட்டுப்பாடும், கொள்கையும் இல்லாதவர்கள் என்பதினால் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் பெரும்பான்மையான மக்களின் மனதில் பாராளுமன்றத்தின் மீது கோபமும் வெறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.