பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம்

Launch of the newsletter image 2
Launch of the newsletter image 2

வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஈ-செய்திமடலான “பாராளுமன்ற வித்தி’ பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் இன்று பாராளுமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.