காலி பகுதியின் சில பிரதேசங்களுக்கு இன்று (28) பிற்பகல் 2 மணி முதல் நாளை (29) அதிகாலை 2 மணி வரையில் 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர்வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ஹபராதுவ, அக்மீமன, ஹபுகல, அஹங்கம, போபே, பொத்தல, ரத்கம மற்றும் தொடம்துவ பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.