தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை நிறைவு செய்து வீடு திரும்பும் 720 பேர்

Camp
Camp

வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 165 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று(புதன்கிழமை) (28) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால் பராமரித்துச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 555 பேர் தமது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பவுள்ளனர்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததன் காரணமாக குறித்த நபர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 118 பேரும், பூவரசன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 193 பேரும், கஹகொல்ல தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 176 பேரும் மற்றும் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 68 பேரும் இவ்வாறு அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன்படி, இதுவரையான காலப்பகுதியில் 27 ஆயிரத்து 494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.