வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டது

images 2 5
images 2 5

இந்நாட்டிற்கு அதிகளவான வருமானம் ஈட்டுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தலைமையிலான தூதரக அலுவலகம் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுக்க பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் முழு நாட்டிலும் அதிகளவான ஆசனங்களை பெற்று ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அமைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.