இராணுவத்தில் பணி புரியம் இரட்டை சகோதரர்களான மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஜயன்த்த செனவிரத்ன ஆகியோர் கின்னஸ் புத்தகத்தில் பதிவாகுவதற்கான ஆவணங்களை சமர்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு சமர்பித்துள்ளனர்.
குறித்த நிகழ்வு இராணுவ தளபதி லெப்பிடினன் ஜெனரால் சவேந்திர சில்வாவின் தலைமையில் இடம்பெற்றதுடன் , கின்னஸ் சாதனை பதிவு குறித்த உள்நாட்டு தேசிய கவுன்சில் தலைவர் சமன் அமரசிங்க ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
ஒரு நாளில் பிறந்து, ஒரே நாளில் பாடசாலையில் சேர்ந்து, உயர் கல்வி வரை ஒரே வகுப்பில் கல்வி கற்று, ஒரே தினத்தில் இராணுவத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அவர்கள் இருவரும் ஒரே தினத்தில் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இருவரும் ஒரே தினத்தில் ஓய்வு பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.