கொரோனா காலத்தில் பாடசாலைகள் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளி , கைகழுவுதல் , வகுப்பில் மாணவர்களுக்கிடையே ஒரு மீற்றர் தூர இடைவெளி முகக்கவசம் அணிவது உட்பட 45 நடைமுறைகள் உள்ளடக்கிய சமூகப்பாதுகாப்புடன் பாடசாலைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது .
இதற்கான ஒன்றுகூடல் இன்று வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தில் பெற்றோர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியில் கொரோனா நோயாளி ஒருவர் இலங்கையில் இனம் காணப்பட்டதையடுத்து இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரையில் கல்வி அமைச்சின் உத்தரவிற்கு அமைவாக மூடப்பட்டுள்ளது . இம் மாதம் மீண்டும் பரீட்சைகள் இடம்பெறவுள்ள வகுப்புக்கள் மட்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது .
ஆரம்பப்பிரிவு உட்பட ஏனைய வகுப்புக்களின் மாணவர்கள் அழைக்கப்படவில்லை தற்போது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள தரம் 6 வகுப்புக்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இடம்பெறவுள்ளது ஏனைய வகுப்புக்களும் சுழற்சி முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் , இதற்காக மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளடங்கிய கையேடுகள் பெற்றோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வழங்கப்பட்டுள்ளதுடன் விடுமுறை காலத்தில் வலயக்கல்வி அலுவலகத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட செயலட்டைகளை மாணவர்கள் பின்பற்றி பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் பெற்றோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது .