மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்செயலுடன் தொடர்புபட்ட 345 பேர் கைது

download 2
download 2

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த 23 மணிநேர விசேட சோதனை நடவடிக்கையில் 345 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று(சனிக்கிழமை) காலை 6.00 மணி முதல் இன்று காலை 5.00 மணிவரையான காலப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

இவர்களுள் ஹெரோயின் வைத்திருந்ததற்காக 135 பேரும், சட்டவிரோத அல்கஹொல் வைத்திருந்ததற்காக 88 பேரும், கஞ்சா வைத்திருந்ததற்காக 72 பேரும், ‍ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக 20 பேரும் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 30 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்