திருகோணமலை இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக முருகன் சிலை ஒன்றை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்த கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் முருகன் சிலையை கைப்பற்றியுள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை இரவு திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு சட்டவிரோதமாக ஐம்பொன்னிலான முருகன் சிலையை கடத்தி வந்து விற்க முயன்றபோது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்
பொலிஸ் உத்தியோகத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்ட திருகோணமலை முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும். புதையலில் இருந்து கிடைத்த சிலை எனவும் அதனை ஒரு நண்பர் தந்தாகவும் இதனை விற்பதற்காக மட்டக்களப்பிற்கு வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.