புத்தளம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு

download 11
download 11

புத்தளம் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரசிறி பண்டார தெரிவித்தார்.

மாவட்டத்தில் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஆறு இலட்சத்தி 17 ஆயிரத்தி 370 வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 13 அரசியல் கட்சிகளையும் 19 சுயேட்சைக் குழுகளையும் சேர்ந்த 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதே வேளை வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள வாக்களர்களுக்கான 12 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சந்திரசிறி பண்டார மேலும் தெரிவித்தார்.