நாளை இடம் பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி இதுவரையில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவத்தார்.