தனிமைப்படுத்தலில் இருந்து வீடு திரும்பியவர் கொரோனா அறிகுறியுடன் வைத்தியசாலையில்

unnamed 1 2
unnamed 1 2

தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வீடு திரும்பிய ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் நேற்றிரவு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம, நியதகல பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீஷெல்ஸில் கப்பல் துறையில் பணியாற்றிய இவர், கடந்த 11ஆம் திகதி இலங்கை திரும்பியிருந்தார். மொரட்டுவ பல்கலைகழகத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வீடு திரும்பி, ஹோமாகமவின் நியதகல பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட சில கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் நேற்றிரவு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள்  வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.