யாழ்ப்பாணத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி வாக்களிப்பு நடவடிக்கை

20200805 080419
20200805 080419

ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காண முடிகிறது.

காலையிலேயே  மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளியினை பேணி  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர்  

யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்த விதமான அச்சமும் இன்றி  கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக  வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது