தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும்

IMG 1044
IMG 1044

9ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம் பெற்று வருகின்றது. 

வாக்களிப்பில் பொது மக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்தி வருவதுடன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.   

இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் அதிகமாக வாக்களித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏகோபித்த வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார்