இனந்தெரியாத மர்ம கும்பலால் யுவதி ஒருவர் கடத்தல்

bigstock Women Who Are Victims Of Human 351706055 678x381 1
bigstock Women Who Are Victims Of Human 351706055 678x381 1

யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத கும்பல் ஒன்று யுவதி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீட்டிற்க்கு வெள்ளை வானில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அதையடுத்து , வீட்டில் இருந்த 20 வயது யுவதியை அடாவடித்தனமாக கடத்திச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்

இச் சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.