இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த போது
வாழ்வாதாரம், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதிகளை தரமுயர்த்துதல், கல்வி மற்றும் மருத்துவமனைகளின் வசதிகள் தொடர்பாக அவசர முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் தனது முந்தைய ஆட்சியின் போது வடபகுதியில் கடும் சூழ்நிலையில் பெருமளவு விடயங்களை செய்ததாக கூறினார்.
இனம் கலாசார பின்னணிகளைக் கடந்து எங்கள் அரசாங்கம் அனைத்து பிரஜைகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் எனவும் துரதிஸ்டவசமாக கடந்த சில வருடங்களாக குழப்பமடைந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.