ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு தாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை

15953231 b2818016 e1812557 harin 850x460 acf cropped 850x460 acf cropped
15953231 b2818016 e1812557 harin 850x460 acf cropped 850x460 acf cropped

ஐக்கிய தேசியக் கட்சி அடைந்த தோல்வியை கண்டு தாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது

தமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் தேர்தல்களில் அக்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் தற்போது ஒன்றுபடுவதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

அதேவேளை அவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை பதவிகளுக்கு நியமிக்க விரும்பினால், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள்.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எங்களுடன் பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சியை அழைக்கிறோம். இந்த கட்சி பிளவுபட வேண்டிய தேவையில்லை கட்சியை முறித்துக் கொள்ளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை என குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாக தொடரும் மற்றும் வலுவான எதிர்கட்சியாகவும் நாடாளுமன்றில் செயற்படும்.” என தெரிவித்துள்ளார்.