ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது.
இதில் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 29 அமைச்சர்களும். 40 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
இதன்போது நிதி மற்றும் வீடமைப்பு அமைச்சு பதவி பிரதமருக்கு வழங்கப்படவுள்ளது என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு பதவி ஜனாதிபதியின் கண்கானிப்பின் கீழ் இருக்கும் வகையில் கடந்த முறையைப் போன்று எவருக்கும் வழங்காது இருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
தேர்தலுக்கு முன்னரான இடைக்கால அரசில் அமைச்சுப் பதவிகளை வகித்த 16 பேரில் சிலருக்கு அதே அமைச்சுப் பதவியை வழங்கவும், மற்றையவர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளவும் அனுமானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட இளம் எம்.பிக்கள் சிலருக்கும் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியுள்ளவர்களில் சிலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் தெரியவருகின்றது.