முதல் அமைச்சரவை கூட்டத்தில் அரசியலமைப்பு மாற்றம், வரவுசெலவு திட்டம் குறித்து முன்னுரிமை

unnamed 6 4
unnamed 6 4

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்பு மாற்றங்களுக்கான முன்மொழிவுகளை அங்கீகரிப்பதற்கும், புதிய வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிற்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

மக்கள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது ஆதலால் புதிய அமைச்சரவை இந்த செயன்முறையைத் தொடங்க அங்கீகாரம் வழங்க முன்னுரிமை எடுக்கப்படும் என்று அரசின் உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.

கண்டியன் மன்னர்களின் பார்வையாளர் மண்டபமாக இருக்கும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ என்றழைக்கப்படும் விழா மண்டபத்தில் பதவியேற்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

28 அமைச்சர்கள் மற்றும் புதிய அரசாங்கத்தின் 40 இராஜாங்க அமைச்சர்கள் இன்று கண்டியில் பதவியேற்க உள்ளனர். இதில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜாங்க அமைச்சைப் பெறுவார் என அறியமுடிகின்றது.

புதிய அரசாங்கம் வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தேர்ந்தெடுத்தது பதவிப்பிரமாணம் செய்து வருகின்றது. அந்தவகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுராதபுரம் ருவன்வெலிசேய அருகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனை அடுத்து பண்டைய வரலாற்றில் புத்தர் பார்வையிட்டதாக நம்பப்படும் களனி ராஜமஹா விகாரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார்.