இன்றைய பதவியேற்பு நிகழ்வில் 39 இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே பதவிப்பிரமாணம்

cap
cap

விஜயதாச ராஜபக்ஷவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கண்டிக்குச் சென்ற விஜயதாச ராஜபக்ஷ, அதனைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டு தலதா மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று (புதன்கிழமை) கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்வர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் 39 இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.