ரயிலுடன் வாகனமொன்று மோதி விபத்து; ஒருவர் பலி

imageproxy 1
imageproxy 1

மட்டக்களப்பு, கல்குடா ரயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழப்பு.

நேற்று (சனிக்கிழமை) மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரயிலுடன் கென்டர் ரக வாகனமொன்று மோதியதால் இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த வாகனமானது தனது வேக கட்டுப்பாட்டினை இழந்து ரயில்வே பாதுகாப்பு கடவையினையும் உடைத்துக் கொண்டு எதிரே வந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் வயது (48) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.