கொழும்பு- கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள தனியார் பல்பொருள் கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.
இத் தீப்பரவல் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கொழும்பு தீயணைப்பு படையின் 5 வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.
முதல் மாடியில் ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் கீழ் தளம் வரை பரவியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் முதலாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலரை பொலிஸார் பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.