பாராளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைப்பு

1548420509 sri lanka parliament 2 1
1548420509 sri lanka parliament 2 1

9 வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது.

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்

பின்னர் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.