எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நாளைய தினம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதான மின் பரிமாற்ற அமைப்புக்கு தொடர்புபடுத்த உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது.
கடந்த 17 ஆம் திகதி மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் ஒரு மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.