கொரோனாவை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்த முதல் நாடாக இலங்கை உள்ளது. அதற்கு யுனிசெப் நிறுவனம் பாராட்டுக்களை கூறியுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி விம் சுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சிறந்த இடம் பாடசாலை எனவும் எனவே பாடசாலைகளை திறப்பது மிகவும் முக்கியமாகும். என சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகள் மூடப்பட்ட சந்தர்ப்பத்தில் கற்கை நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்ற போதிலும் கற்பதற்கான சிறந்த இடம் பாடசாலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் கொரோனா தடுப்பிற்கான சுகாதார வழிக்காட்டல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.