கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியிருந்த 426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையர்கள் இன்று (புதன்கிழமை) காலை மத்தல மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 23 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்