சொகுசு காரில் கஞ்சா கடத்தல்

IMG 5998
IMG 5998

சொகுசு காரில் கஞ்சா கடத்திச் சென்ற நால்வர் நெல்லியிடிப் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியிடிப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வீதியால் வந்த காரை மறித்து சோதனை செய்துள்ளனர்.

இதன் போது இரண்டு கிலோ கேரள கஞ்சாவை காருக்குள் மறைத்து வைத்திருந்ததை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் நான்கு பேரைக் கைது செய்துள்ளதுடன் சொகுசு காரையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லலியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது