அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும் கண்காணிப்பு பிரிவு, நடவடிக்கைகளை மிக உண்ணிப்பாக மேற்கொண்டுவருவதாக, தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம், தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் இயங்கி வருகிறது அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச நிறுவன தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.பீ.சி.குலரட்ன தெரிவித்தார்.

இந்த நிலையம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று, அவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக பொறுப்பதிகாரி பி.பீ.சி.குலரட்ன தெரிவித்துள்ளார்.