இலங்கைத் தமிழர்கள் தொடர்பான குடியுரிமை விவகாரத்தில் அ.தி.மு.க அரசு நாடகம் ஆடுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தர போவதாக எடப்பாடி அரசு கூறுவது வேடிக்கையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.