அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய ராணி!

3 med
3 med

பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது.

உத்தியோக தகவல்களின்படி, பிரித்தானியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,140 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

பேராசிரியர் கிறிஸ் விட்டி கூற்றுப்படி, வைரஸால் பாதிக்கப்பட்டு ஒரே இரவில் உயிரிழந்த கடைசி 10 பேர், வயது முதிர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கொரோனா வைரஸுக்கு திட்டமிடலின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரைவில் நான்கு மாதங்கள் கடுமையான தனிமையில் இருக்குமாறு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தொற்றுநோய் மோசமடைந்துவிட்டதால், பிரித்தானியா மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.