தமிழகத்தின் அரசியல் பிரமுகர் கொரோனாவால் மரணம்!!

6 hh
6 hh

தமிழகத்தின் திமுக சட்டமன்ற உறுப்பினரான (எம்.எல்.ஏ)ஜெ.அன்பழகன் காலமானார். அவர் தனது 62 வயதிலேயே அவரது பிறந்த நாளான இன்று மரணமாகியுள்ளார் .

திமுக சட்டமன்ற உறுப்பினரான (எம்.எல்.ஏ) ஜெ. அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ஆம் திகதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வைத்தியர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயங்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டது.

கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் வைத்தியசாலை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் வைத்தியசாலைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

ஜெ.அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்துள்ள நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.