இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடி

Tamil News large 1965991
Tamil News large 1965991

ஆகஸ்ட் 15 ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொரோனா வைரஸிலிருந்து முற்றிலும் விடுபடுவதாக உறுதிமொழி எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் எண்ணிக்கை இப்போது 13 இலட்சத்து 89 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் அங்கு பதிவான கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 32,000 க்கும் அதிகமாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரேசில் தவிர்த்து, கொரோனா வைரஸின் உலகளாவிய தொற்றுநோயால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

மான் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே பிரதமர் மோடி குறித்த விடயத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.