அயோத்தி இராமர் ஆலய பூமி பூஜை: முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு

கோயில் 720x450 1
கோயில் 720x450 1

அயோத்தியில் நடைபெறவுள்ள இராமர் ஆலய பூமி பூஜையில் கலந்து கொள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.உள்ளிட்ட அமைப்பினர்களுக்கும் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி இராமர் ஆலய பூமி பூஜை நடைபெறுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  ஆலய நிர்வாகத்தினரால் முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக  இராமர் ஆலய அறக்கட்டளை தரப்பு தெரிவித்துள்ளதாவது, ‘உ.பி. சன்னி மத்திய வக்பு வாரிய தலைவர் சஃபர் ஃபரூக்கி, உ.பி. ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி, அயோத்தி நில விவகார வழக்கில் மனுதாரரான இக்பால் அன்சாரி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர்.

இதேவேளை ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தலைவர் மோஹன் பாகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்’  என குறிப்பிடப்பட்டுள்ளது.